tamilnadu

வனத்துறை அமைச்சரை  பாதுகாக்கும் முதலமைச்சர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

திருவாரூர், பிப்.12- தமிழக முதல்வர் மற்றும் வனத்துறை அமைச்சரின் அணுகு முறையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திரு வாரூர் மாவட்டக்குழு வன்மையாக கண்டித்துள்ளது.  முன்னணியின் மாவட்டக்குழு கூட்டம் திருவாரூரில் புதன்கிழமை மாவட்டத் தலைவர் கதாக.அரசு தாயுமான வன் தலைமையில் திருவாரூரில் நடைபெற்றது. மாவட்ட செய லாளர் கே.தமிழ்மணி, பொருளாளர் கே.பிச்சைக்கண்ணு, மாவட்ட நிர்வாகிகள் கே.கோபிராஜ், ஆர்.மாலதி மற்றும் மாவ ட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தி ற்கு எதிராகவும், அமைச்சர் என்கின்ற முறையில் அவர் ஏற்றுக்  கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிராகவும் சட்டவிரோத மாக நடந்து ஆதிக்க உணர்வுடன் மலைவாழ் பழங்குடியின மாணவனிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்துக் கொ ண்டதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தீண்டாமை  சிந்தனையுடன் தான் செய்த குற்றத்தை மறைப்பதற்காக சம்ப ந்தப்பட்ட குடும்பத்தினரை தான் தங்கியிருந்த  விருந்தினர் இல்லத்திற்கு கட்டாயப்படுத்தி வரவழைத்து தான் செய்தி ருந்த செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக நாடகம் நடத்தி மாண வனின் புகாரை திரும்ப பெற வைத்து தண்டனையில் இருந்து  தப்பித்துள்ளார். இந்த போக்கு சரியானது அல்ல.  மத்திய மாநில தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல வாரியமும், மனித உரிமை ஆணையமும் தாமாக முன்  வந்து அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்ச ருக்கு நிர்பந்தம் அளிக்க வேண்டும். முதலமைச்சர் அரசின் மரியாதையை பாதுகாத்துக் கொள்ள அமைச்சரவையில் இருந்து திண்டுக்கல் சீனிவாசனை நீக்கி அவர் செய்த குற்ற த்திற்குரிய தண்டனை வழங்க வேண்டும்.  அமைச்சரால் அவமானப்படுத்தப்பட்டு சுயமரியாதை பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின குடும்பத்தை தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்து அரசின் ஆதரவை தெரி விக்க வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்கு உரிய நம்பிக்கையை உருவாக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்று எந்த செயலும் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி விரைவில் அறவழியில் போராட்டங்களை நடத்தவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் திருவாரூர் மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது.