tamilnadu

மாணவனிடம் சாதியை விதைக்கும்  அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியை தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

தூத்துக்குடி, ஜூன் 16- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள குளத்தூ ரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியின் உதவித் தலைமை  ஆசிரியரான கலைச்செல்வி என்பவர், தன் பள்ளியில் பயிலும் மாண வனிடம் பேசியுள்ள செல்போன் உரையாடல்... சாதியை தூண்டும்  வகையிலும், பள்ளியில் நடைபெறவிருக்கும் பெற்றோர் - ஆசிரியர்  கழக தலைவர் தேர்வில் சாதியை நுழைக்கும் விதமாகவும் உள்ள  ஆடியோ ஒன்று தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக  வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூ ரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியின் உதவித் தலைமை  ஆசிரியரான கலைச்செல்வி என்பவர் தன் பள்ளியில் பயிலும் மாண வனிடம் ஜாதியை தூண்டும் வகையிலும், பள்ளியில் நடைபெற விருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலில் தலித் ஒருவர் தலைவ ராக வந்து விடக்கூடாது என்ற ஜாதிய வன்மத்துடனும் பேசியிருப்பது  மிகவும் கண்டனத்திற்குரியது. பள்ளியில் பயிலும் பிற மாண வர்கள், ஆசிரியர்கள் மத்தியிலிருந்து தலித் ஆசிரியர்கள், மாண வர்களை பிரித்து தீண்டாமையை உருவாக்கும். மாணவர்கள் மத்தியில் தீண்டாமையை விதைக்கும் வகையில் பேசிய குளத்தூர் அரசு  மேல்நிலைப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி.  துணையாக இருந்த கணினி ஆசிரியர் மீனா ஆகியோர் மீது தீண்  டாமை வண்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து,  பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும். மேலும் இது போன்ற தீண்டாமை சம்பவங்கள் தொடராமல் இ ருக்க கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசையும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளனர்.