tamilnadu

img

சேங்காலிபுரம் தொடக்கப்பள்ளிக்கு விருது

குடவாசல், மார்ச் 24- திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியத்தில் உள்ள சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா சிறப்பு பரிசளிப்பு திட்ட விருது (ரூ.25000) வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 ஆம் நாள் காமராசர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப் பட்டு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டு விழா நடைபெறும். இந்த நிகழ்ச்சியினை சிறப்பாக செய்தமைக்கு சிறந்த பள்ளியாக சேங்காலிபுரம் தொடக்கப்பள்ளியி னை ஆட்சியர் தலைமையிலான குழு தேர்வு செய்து காமராசர் பிறந்தநாள் விழா சிறப்பு பரிசளிப்பு திட்ட விருது (ரூ.25000) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆ.தியாகராஜன் வாயி லாக ரூ.25000 க்கான  காசோலை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது. விருது பெற்ற மைக்கு குடவாசல் வட்டார கல்வி அலுவலர்கள் க.இளங்கோவன், கு.கலா ஆகியோர் பள்ளித் தலைமை ஆசிரியர் து.இந்திரா மற்றும் ஆசிரியர்களை பாராட்டினர்.  மேலும் சேங்காலிபுரம் ஊராட்சி தலைவர் ஆர்.கண்ணன், துணை தலைவர் சிவா சிவாச்சாரியார், பெற்றோர் ஆசிரிய சங்க தலைவர் வே.கோவிந்தராஜன், துணை தலைவர் எஸ். அம்பிகாபதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் எஸ்.கீதா, மகளிர் சுய உதவிக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சாவித்திரி, கிராம முக்கிய பிரமுகர் கள் உள்ளிட்டோர் மற்றும் சேங்காலி புரம் இந்தியன் வங்கி மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு தலைமையா சிரியர் இந்திரா மற்றும் ஆசிரியர்க ளை பாராட்டி வாழ்த்து தெரி வித்தனர்.