திருவாரூர், ஆக.8- அரசு கலைக்கல்லூரியில் இணையவழி கல்வியை ரத்து செய்யகோரி திருவிக அரசுக் கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கிரா மப்புறத்தில் இணைய சேவை வசதிகள் கூட இல்லாமல் தவிக்கும் இந்த சூழ்நிலையில் 7 மணிநேரம் இணையவழி கல்வி என்று அரசு அறிவித்துள்ளது. உடனடியாக இந்த அறி விப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் இரா.ஹரிசுர்ஜித் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.