திருவாரூர், ஜூன் 8- பருத்திக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 5 ஆயிரத்து 825 ரூபாய் மற்றும் 5 ஆயிரத்து 515 ரூபாயை பெற்றுத் தர வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்ரமணியன் தலை மையில் அளிக்கப்பட்டது. நிகழ்வில் சங்க மாவட்ட தலைவர் எஸ்.தம்பு சாமி, செயலாளர் வி.எஸ்.கலியபெரு மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மனுவில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு திருவா ரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பருத்தியை அதிகம் விவசாயம் செய்துள்ளார்கள். பருத்தி சாகுபடி செய்ய உற்பத்தி செலவு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 வரை ஆகிறது.
மத்திய அரசு நீண்ட இலை ரகத்திற்கு ரூ.5,515 மற்றும் குட்டை இலை ரகத்திற்கு 5,825ம் பரிந்துரை விலையாக அறிவித்துள்ளது. ஆனால் அரசு வேளாண்மைத் துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 02.06.2020 அன்று ஒரு குவிண்டாலுக்கு ரூ.4600 என்ற அளவில் ஏலம் கோரப்பட்டது. தனியார் வியாபாரிகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3200 வரை கொள்முதல் செய்து வருகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் 7 அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இருந்தா லும் திருவாரூர், குடவாசல், வலங்கை மான் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே செயல்படுகிறது. மற்ற நான்கு மையங்களும் செயல்பட வில்லை. அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.