tamilnadu

img

சிபிஎம் கட்சியில் புதிதாக 25 குடும்பங்கள் இணைந்தன...

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் வேலங்குடி ஊராட்சி தலைவாயிருப்பு கிராமம் மேலத்தெருவில் சரவணகுமார்,சுயம்பிரகசம், பூமாலை ஆகியோர் தலைமையில் 25 குடும்பங்கள்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இதில் வலங்கைமான் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.ராதா தலைமை வகித்தார்.மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, செங்கொடியேற்றி வைத்துபேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்டக்குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன், நகரச் செயலாளர் எஸ்.சாமிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என்.பாலையா, டி.சண்முகம்,சி.கருப்பையன், கே.கலியபெருமாள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.