திருவள்ளூர், ஜன.21- திருவள்ளூர் அருகில் உள்ள இந்துஸ்தான் மோட்டார் கார் கம்பெனியில் பணியாற்றி வந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் அருகில் உள்ள அதிகத்தூரில் இந்துஸ்தான் மோட்டார் கார் தொழிற்சாலை இயங்கி வந்தது. இதில் கடந்த 20- ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 175 நிரந்தர தொழி லாளர்கள் பணியாற்றி வந்த னர். இந்த தொழிற்சாலை தற்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிசிஏ என்ற கம்பெனிக்கு கைமாறியுள் ளது. எந்த நிர்வாகம் மாறினா லும் ஏற்கனவே பணியாற்றி வந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றலாம் என இந்துஸ்தான் மோட்டார் கம்பெனி ஏற்கனவே உறுதியளித்திருந்தனர். இருந்தும் இந்துஸ்தான் மோட்டார் நிர்வாகம் கடந்த 2019 ஜூலை 2 முதல் அனைத்து தொழிலாளர் களையும் சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்துள்ளது. அதன் பிறகு வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவன மும் பழைய தொழிலாளர் களை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ள மறுத்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து தொழிற்சாலை முன்பு கடந்த ஜனவரி 18 முதல் ஏற்கனவே பணியாற்றி வந்த அனைத்து தொழிலாளர்க ளுக்கும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்துஸ்தான் மோட்டார் கார் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அ.சவுந்தரராசன், துணைத் தலைவர்கள் ப.சுந்தரராசன், கே.செங்குட்டுவன், செய லாளர் என்.பாலகுமார், பொருளாளர் எம்.கிருஷ் ணன், இணைச் செயலாளர் கள் ஏ.பாலமுருகன், கே.ஸ்ரீராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.