tamilnadu

img

பழவேற்காடு மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா?

திருவள்ளூர், ஜூன் 25- மீன் அங்காடியை திறந்தால் கொரோனா  தொற்று ஏற்படும் என்பதால் அச்சத்தால் தொழி லுக்கு செல்லாமல் பழவேற்காடு மீனவர்கள்  முடங்கி கிடக்கின்றனர். எனவே, அவர்க ளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கோரிக்கை  எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு உப்பங்  கழி ஏரியும், கடலும் சந்திக்கும் முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் உருவாகின. இதனால் மீனவர்கள்  கடலுக்கு செல்லும் படகுகள் தரைதட்டி சேதம்  அடைந்தன. எனவே, முகத்துவாரத்தை  தூர்வார கோரி மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து 2019ஆம் ஆண்டு 1.45  கோடி ரூபாய் செலவில் முகத்துவாரம் தூர்வாரப்  பட்டது. மணல் அரிப்பைத் தடுக்க இருபுறமும் சிமெண்ட் கலவைகளால் ஆன தடுப்பு சுவர் அமைக்காததால் ஆறு மாத காலத்தில் மீண்டும் முகத்துவாரத்தில் மணல்திட்டுகள் உருவாகி விட்டன. இதனால் மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடல் நீரும் ஏரிக்கு உள்ளே வராததால் மீன்பிடித் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடைகளை திறந்தால் மீன், நண்டு,  இறால் போன்றவற்றை வாங்க ஆயிரக்கணக் கான மக்கள் கூடுவார்கள், கொரோனா தொற்று  பரவும் அபாயம் ஏற்படும் என்பதால் அங்காடியை  திறக்க வேண்டாம் என  அரசு கேட்டுக்கொண்டது. அதனையேற்று ஒட்டுமொத்த மீனவர்களும் தொழிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி யுள்ளனர். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டச் செய லாளர் டி.நித்தியானந்தம் கூறுகையில், முகத்துவா ரத்தை மணல் மூடிவிட்டதால், பழவேற்காடு ஏரி யின் மட்டம் உயர்ந்ததும், கடல் மட்டம் தாழ்வாக வும் உள்ளது. இதனால் ஏரியையும், முகத்துவா ரத்தை நவீன எந்திரங்களை கொண்டு தூர்வார வேண்டும், மீனவ கூட்டுறவு சங்கங்களில் அனை வரையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். என்றார்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 66 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் முகத்துவாரம் தூர்வாரி, தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று சட்ட மன்றத்தில் அறிவித்தார். அதனை தற்போதைய முதல்வர் நிறைவேற்ற வேண்டும். 2 மாதத்திற்கும்  மேலாக தொழில் செய்யாமல் உள்ள மீனவர்க ளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். -பெ.ரூபன்