திருவள்ளூர், பிப்.20- கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சிறுபுழல்பேட்டை ஊராட்சியி லிருந்து குருவராஜ கண்டிகை செல்லும் பாட்டியா கம்பெனி செல்லும் வழி மிகவும் பழுதடைந்திருந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என பல முறை கோரிக்கைகள் எழுந்தன. அதிகாரி கள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சிறுபுழல்பேட்டை பகுதி ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார் தலைமையில் பிப்.19 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலையை செப்பனிடும் பணி நடை பெறுகிறது. இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார் சிறுபுழல்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சுசிலா மூர்த்தி, கிராம வார்டு உறுப்பினர்கள் அப்பணியை கண்காணித்து வருகின்றனர்.