tamilnadu

img

மின்மாற்றியை மாற்றக்கோரி ஊர்மக்கள் போராட்டம்

திருவள்ளூர், ஜூலை 12 -  பள்ளி அருகே ஆபத்தான நிலையில் இருக்கும் மின்மாற்றியை ( டிரான்ஸ்பார்மர்) வேறு இடத்திற்கு மாற்றக்கோரி ஞாயி றன்று (ஜூலை 12)  அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மாளந்தூரில்  அரசு துவக்கப்பள்ளி, ரேசன்  கடை, அங்கன்வாடி, பஞ்சாயத்து அலுவல கம் ஆகியவை ஒரே வளாகத்தில் அமைந் துள்ளது. இதன் அருகில் ட்ரான்ஸ்பார்மர் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்  கப்பட்ட மின்மாற்றி, மிகவும் பழுதடைந்து கீழே விழும் அளவிற்கு ஆபத்தான நிலை யில் உள்ளது. மேலும் மின் கம்பிகள் ஆங்காங்கே சேதம்  அடைந்துள்ளது. சாலைகளில் தாழ்வாக தொங்குகிறது. பழைய மின் கம்பிகள் என்ப தால் எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழும் நிலையில் உள்ளது. தலித் மக்களின் தொகுப்பு வீடுகள் மீது மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் சிலர் வீடு  கட்ட முடியாத நிலையில் உள்ளனர். எனவே, மின் மாற்றியை வேறு இடத்திற்கு  மாற்ற வேண்டும், பழைய மின் கம்பங்கள், மின் கம்பிகளை மாற்ற வேண்டும் என வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்  தின் தலைமையில் ஊர்மக்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைச்  செயலாளர் டி.சண்முகசுந்தரம், பெரிய பாளையம் பகுதி செயலாளர் மதன், ஊராட்சி  மன்றத் தலைவர் வி.விஜயன், விவசாய தொழி லாளர் சங்கத்தின் தலைவர் டி.குமார் உள்ளிட்டோர் பேசினர்.