tamilnadu

img

நீதி விசாரணை கோரி எஸ்பியிடம் மனு

திருவள்ளூர், ஜூன் 24-  காதலித்து ஏமாற்றப்பட்ட தால் உயரிழந்த பெண்ணின்  மரணம் குறித்து நீதி விசா ரணை நடத்த கோரி திரு வள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகில் உள்ள நல்லாட்டூர் கிராமம், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர் மணிமேகலை (24). தாழவேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இரு வரும் 4 ஆண்டுகளாக காத லித்து வந்தனர். ஆனால் சாதியை காரணம்காட்டி ராஜ்குமார் திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த மணிமேகலை தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணம் குறித்து நீதி  விசாரணை நடத்த வேண்டும்,  தற்கொலைக்கு தூண்டிய வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு தீண்  டாமை ஒழிப்பு முன்னணி  சார்பில் மனு அளிக்கப் பட்டது. மணிமேகலையின் பெற்றோர், முன்னணியின் மாநில பொருளாளர் இ. மோகனா, மாவட்டத் தலை வர் இ.எழிலரசன், செய லாளர் த.கன்னியப்பன் ஆகி யோர் மனுவை அளித்தனர்.