tamilnadu

காலமானார்

திருவள்ளூர், ஜூலை 22 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டக்குழு உறுப்பினர் என்.கீதாவின் தாயார் நளினி புதனன்று (ஜூலை 22) காலமானார். அவருக்கு வயது 75. கும்மிடிப்பூண்டி, சாமிரெட்டி கண்டிகையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்ககு கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கோபால், செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், பி.துளசிநாராயணன், ஏ.ஜி.கண்ணன், கே.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜி.சூர்யபிரகாஷ், ஆர்.தமிழரசன், என்.கங்காதரன், எஸ். செந்தில்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் அவரின் சாமிரெட்டிகண்டிகை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.