உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி புதனன்று (ஆக.19) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார்பு நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை ருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் போராடினர்.