tamilnadu

பொறியாளர் வீட்டில் கொள்ளை

திருவள்ளூர், ஏப்.28-திருவள்ளூர் கேஜிபி நகரை சேர்ந்தவர் வர்மா (65). இவரது மனைவி சவுதா. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சனிக்கிழமை மனைவியை பார்க்க வர்மா வீட்டைப் பூட்டிவிட்டு மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். ஞாயிறன்று காலை வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் பணம்,60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

;