திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த பழையனூர் கிராமம் வழியாக செல்லும் ஒன்றிய சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் அந்த சாலை தார்ச் சாலையாக மாற்றப்பட்டது. அதேசமயம் சாலையில் சுமார் 3 மீட்டர் தூரம் தார்ச்சாலை அமைக்காமல் விட்டுவிட்டனர். இதுகுறித்து திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்தும் சாலை சரி செய்யப்படவில்லை. ஆனால், ஒப்பந்ததாரருக்கு பணி முடித்ததற்கான பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, விடுபட்ட சாலையை சரி செய்வதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.