tamilnadu

img

ஊதியம் வழங்காததால் தீபாவளி கொண்டாட முடியாமல் தவிக்கும் டேங்க் ஆப்ரேட்டர்கள்

திருவள்ளூர், அக். 25-  மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள 55 ஊராட்சி களில்  டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு, தூய்மை காவலர்கள் என 400க்கும்  மேற்பட்ட வர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த கடைநிலை ஊழியர்கள் குடிநீர் விநி யோகம், தூய்மை போன்ற முக்கிய பணிகளில்  தினசரி ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு  கடந்த 24 மாதங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை. மேலும் 7ஆவது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும். அத்திப்பட்டு, நாலூர், வல்லூர் ஆகிய ஊராட்சிகளில் சுமார் 12 மணி நேரம்  வரை பணியாற்றும் டேங்க் ஆப்ரேட்டர்க ளுக்கு மிகை ஊதியம் வழங்க வேண்டும்,  அடையாள அட்டை, 3 ஆண்டுகளுக்கு மேல்  பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை காவ லர்களுக்கு சீருடை, கையுறை, காலணி போன்ற பணிக்கருவிகள் ஆண்டுதோறும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் மீஞ்சூர் பிடிஓ அலுவலகம் முன்பு வெள்ளியன்று (அக். 25) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செய லாளர் ஏ.ஜி.சந்தானம், மாவட்ட துணைத்  தலைவர் குமரவேல், ஒன்றியச் செயலாளர்  தேவராஜ், துணை நிர்வாகிகள் பச்சையப்பன்,  யூதாஸ், நித்தியானந்தம், நாலூர் ஆனந்தன்,  சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், நிர்வாகி எஸ்.செல்வராஜ், விதொச தலை வர் எஸ்.இ.சேகர், வாலிபர் சங்கம் ஒன்றிய பொருளாளர் ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே 16 ஊராட்சிகளில் உள்ள  64 தூய்மை காவலர்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்பட்டது. மற்ற ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று ஒன்றிய  பொது நிதியிலிருந்து பணம் பெற்று அனைத்து  ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி யளித்துள்ளார்.