tamilnadu

வாகன விபத்தில் 7 மாத குழந்தை பலி

திருவள்ளூர், ஏப்.17-திருவள்ளூர் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் தனியார் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இங்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ், மனைவி மற்றும் 7 மாத ஆண் குழந்தை வசந்த குமாருடன் தங்கி வேலைபார்த்து வந்தார். செவ்வாயன்று மதியம் குழந்தை வசந்தகுமாரை தங்குவதற்காக அமைக்கப்பட்ட குடிசை வீட்டு முன்பு படுக்க வைத்தவிட்டு காமராஜூம், அவரது மனைவியும் அங்குவேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் செங்கல் சூளையில் நிறுத்தப்பட்டு இருந்த மினி லாரியை டிரைவர் மணிமாறன் ஒட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டார்.அப்போது வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை வசந்தகுமாரின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.இது குறித்து வெள்ளவேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் மணிமாறனை தேடி வருகின்றனர்.  

;