tamilnadu

img

சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் திருவண்ணாமலை உழவர் சந்தை

திருவண்ணாமலை உழவர் சந்தை பராமரிப்பு இல்லாத காரணத்தினால் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதுடன், குப்பை மேடாக வும் மாறிவருகிறது. இதனால் உழவர் சந்தைக்கு பொருட்கள் கொண்டுவரும் விவ சாயிகளும், கொள்முதல் செய்யவரும் பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். காய்கனி உற்பத்தி செய்யும் விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி, பொது மக்களுக்கு விற்பனை செய்வதற்காக, உழவர் சந்தை துவக்கப்பட்டது. உழவர் சந்தை அமைந்துள்ள பகுதியில் விளையும் காய்கறிகளைக் கொண்டு வந்து வாடகையின்றி இலவசமாக கடை களில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். சந்தைக்குள் விற்பனை செய்யப்படும் காய்கறிகளுக்கு அரசு அதிகாரிகள் தினமும் காலை யில் விலை நிர்ணயம் செய்து வருகின்றனர். இந்த விலை வெளி மார்க்கெட் விலையை விட குறைவாக இருக்கும். தமிழகத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளில் திரு வண்ணாமலையில் உள்ள உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகி றது. இந்நிலையில் தற்போது உழவர் சந்தை பராமரிப்பின்றி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. தினசரி குப்பைகள் அகற்றப்படாததால் மலை போல் குவிந்து கிடக்கிறது. மேலும் இதிலிருந்து துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.  கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்களும், விவசாயிகளும் அவதிப்படுகின்றனர். மேலும், வட்டாட்சியர் அலுவலகம் வழியாக உழவர் சந்தைக்கு செல்லும் வழியில் கால்வாய் திறந்து கிடப்பதால் பொதுமக்கள் பலர் அதில் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.  எனவே பொதுமக்கள், விவசாயி கள் நலன் கருதி உழவர் சந்தையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செந்தாமரைக்கண்ணன்