திருவண்ணாமலை, அக்.16- திருவண்ணாமலையில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் சார்பில், உலக திரைப்பட விழா துவக்க நிகழ்ச்சி கள் புதனன்று (அக். 16) நடை பெற்றது. திருவண்ணாமலை அரு ணாச்சலம் திரையரங்கில் நடை பெற்ற உலக திரைப்பட விழாவில், துவக்க நிகழ்ச்சியாக, திரைத்துறை கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத் தப்பட்டது. தொடக்க விழாவிற்கு தமு எகச கௌரவத் தலைவர் ச.தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கினார். வரவேற்பு குழுத் தலைவர் எஸ் .குழந்தைவேலு வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் களப்பிரன் விழா நோக்க உரையாற்றினார். விழாவை தொடங்கி வைத்து திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு. கந்தசாமி சிறப்புரை யாற்றினார். திரைப்பட இயக்குநர் கோபி நயினார், திரைக் கலைஞர் ஷீலா, திரைத் துறை பேராசிரியர் எம். சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமுஎகச மாவட்டச் செய லாளர் மு.பாலாஜி நன்றி கூறினார். மாநில துணைப் பொதுச் செயலா ளர் எஸ். கருணா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கும்ப ளாங்கி னைட்ஸ் என்ற மலையாள படம் முதல் படமாக திரையிடப் பட்டது. முன்னதாக பாப்பம்பாடி ஜமா பெரிய மேளத்தின் இசை நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டது.