tamilnadu

img

திருவண்ணாமலை: கிணறு தூர்வாறும் போது ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலி

திருவண்ணாமலையில் கிணறு தூர்வாறும் போது கயிறு அறுந்துவிழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 

திருவண்ணாமலையை அடுத்த ஆலத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான கிணற்றை தூர் வாரும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணியில் ஏழு பேர் ஈடுபட்டிருந்தனர். தூர் வாரும் பணி முடிந்து, மேலே ஏறும் போது திடீரென கயிறு அறுந்து விழந்தது. இந்த விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இடிபாடுகளில் சிக்கிய உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 


;