states

img

பீகார்: சாலை விபத்தில் சிக்கி 6 பேர் பலி

பீகாரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
பீகார் மாநிலம் கட்டிகார் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 31ல் சென்று கொண்டிருந்த  லாரியும் காரும் எதிர்பாரத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.