tamilnadu

img

ஆளுநருடன் திருமாவளவன் சந்திப்பு

சென்னை, செப்.17- சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் அலுவலகத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல். திருமாவள வன் எம்பி, ஆளுநர் பன்வாரிலால் புரோ கித்தை சந்தித்தார். பிறகு செய்தியாளர்க ளைச் சந்தித்த அவர்,  தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சிறுபான்மையினர் மற்றும்  பெண்கள் ஆகியோருக்கு உரிய பிரதிநிதித்து வம் வழங்க வேண்டும் என உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டி, பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகிய பதவிகளுக்குஅவர்களை நியமிப்பது குறித்து பரிசீலிக்குமாறு மனு அளித்ததாகக் கூறினார். 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்தி யும், மனுவை அளித்தபோது அதற்கு ஆதர வாகவோ, எதிராகவோ ஆளுநர் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் திருமாவளவன்  குறிப்பிட்டார்.

;