tamilnadu

சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் பலி


திருவண்ணாமலை, மே 11-திருவண்ணாமலை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் பலியாயினர். வாணாபுரம் அடுத்த சிறுப்பாக்கம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த, நாராயணன் மனைவி ஜெயக்கொடி (37). இவர், மாட்டுக் கொட்டகையில் இருந்தார். அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியதில், கொட்டகை முறிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த ஜெயக்கொடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அதேபோல், போளூர் அடுத்த மட்டப்பிறையூரை சேர்ந்த சின்னக்குழந்தை (90), அவரது மனைவி கனகவள்ளி (80) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு வீட்டின் ஒரு பக்க மண்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகவள்ளி உயிரிழந்தார். சின்னகுழந்தை சிகிச்சை பெற்று வருகிறார்.

;