tamilnadu

img

கட்டப்பட்ட சில நாட்களிலேயே சிதைக்கப்பட்ட நடைமேடை

திருவண்ணாமலை,நவ.9- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஏரிக்கரையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே அறிவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரூ.2 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் அறிவியல் சார்ந்த செயல் முறைகள் மற்றும் விளக்க படங்களும், பொறியியல், எந்திரவியல், இயற்பியல், வெப்பம், ஓசை ஆகியன குறித்த உபகரணங்களும், திசைகாட்டி, வெப்பமானி,ஈரமானி போன்றவைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக இந்த பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்குள்ள ஏரிக்கரையில் 200 மீட்டர் அளவில் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. புற்கள், பூச்செடிகள், கலைக்கூடம் உள்ளிட்டவைகள் பூங்காவில் இடம்பெற்றுள்ளன. இந்த பூங்காவின் நடுவில் நடைமேடை அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட நில தினங்களிலேயே, பூங்காவிற்கு கட்டுமான பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரி ஏரியதால், அந்த நடைமேடை சிதைந்து போனதை, அங்குவரும் மக்கள் கண்டு வருத்தப்பட்டு செல்கின்றனர். தவிர்க்கமுடியாத சூழலில், அந்த வழியில் லாரி செல்லவேண்டியிருந்தாலும், அந்த நடையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்களை எடுத்துவிட்டு, பின்னர் லாரியை இயக்கியிருக்கலாம். அல்லது, வேறு வழியில் கட்டுமான பொருட்களை கொண்டு சென்றிருக்கலாம் என்றும், அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.