tamilnadu

img

பயணியர் நிழற்குடை வேண்டும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை

திருவண்ணாமலை, ஜூன் 6-திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை மூலைப்பகுதி யில் நிழற்குடை அமைக்க வேண்டும் என விவசாயிகள்  குறைதீர்வு கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. வந்தவாசியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ஜா.வே.சிவராமன், பெ.அரிதாசு, ராதாகிருண்ணன், பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் வட்டாரக் குழு உறுப்பினர் அப்துல் காதர் அளித்த கோரிக்கை மனுவில், வந்தவாசி பழைய பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள், புதிய வழித்தடம் அறிமுகப் படுத்தியதையடுத்து, கோட்டை மூலை வழியாக திருப்பி விடப்பட்டு புதிய பேருந்து நிலையத்திற்கு செல்கின்றன. கடைவீதிகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள், ஒழுங்குமுறை விற் பனைக் கூடத்திற்கு வரும் விவசாயிகள், மாணவர்கள், வந்து, இறங்கி செல்லக் கூடிய முக்கிய கேந்திரமாக, கோட்டை மூலை விளங்கி வருகிறது.கோடையிலும், மழையிலும், பொதுமக்கள் கடைகளின் ஓரங்களில் ஒதுங்கி நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.  இது குறித்து, ஏற்கனவே விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை தெரிவித்தும், இதுவரை எவ் வித தீர்வும் காணப்படவில்லை.சமீபத்தில், ஒரு தனியார் ஆன்மீகத் தொண்டு நிறுவனத்தால், இரண்டு மாத கால அவகாசத்தில், ஆரணி சாலையில் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அது வரவேற்கத்தக்கது. ஆனால், அரசு, மாவட்ட நிர்வாகம் சார்பில்,  இதுவரை  பயணியர் நிழற்குடை குறித்து எவ் வித முயற்சியும் எடுக்க வில்லை. எனவே, கோடை காலத்தின் கடுமை கருதி, கோட்டை மூலைப் பகுதியில், பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.