திருவண்ணாமலை, பிப். 22- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, ஆடு மேய்த்து வந்த தொழிலாளி மர்மமான முறை யில் மரணமடைந்ததுள்ளார். இதனால் ஆதரவின்றி தவிக்கும் அவரது குடும்பத்திற்கு உரிய நிவா ரணம் வழங்கக் கோரி அரசசூர் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்க டேசன் மற்றும் கிராம மக்கள் ஆட்சிய ரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா, அனக்காவூர் அடுத்த அரசூர் கிராமத்தைச் சேர்ந்த வர் கோபாலகிருஷ்ணன். இவர் கூலிக்காக ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று, பக்கத்து ஊரான குளமந்தை கிராமத்திற்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது ஓய்வு பெற்ற ஆசிரியர் வரதன் என்பவரின் நிலத்தில் இருந்த பயிர்களை ஆடுகள் தவறதலாக மேய்ந்துள்ளது. இதில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஆசிரியர் வரதன், தன் நிலத்தில் ஆடு மேய்ந்ததற்கு அபராதத் தொகையாக ரூ. 20 ஆயிரம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். கோபாலகிருஷ்ணனால், ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்க முடிந் தது. ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் வரதன், தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த நிகழ்விற்கு பிறகு கோபால கிருஷ்ணனை காணவில்லை. அவரை குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி ஆசிரி யர் வரதன் நிலத்திற்கு அருகில் உள்ள ஒரு மரத்தடியில், அமர்ந்த நிலையில், தூக்கில் தொங்கியபடி கோபாலகிருஷ்ணன் உடல் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் ஆசிரி யர் மீது நடவடிக்கை எடுத்து வரு கிறார்கள். உயிரிழந்த கோபாலகிருஷ்ணன் குடும்பத்திற்கு ஆண் பிள்ளைகள் யாரும் இல்லை. சரஸ்வதி (45) என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு தொகுப்பு வீடு ஒன்று மட்டுமே உள்ளது. எனவே ஆதர வின்றி தவிக்கும் கோபால கிருஷ்ணன் குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.