திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரியும் சுகாதார சேவையை மேம்படுத்த வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. புதுவை பிரதேச செயலாளர் சரவணன், மாவட்டச் செயலாளர் அன்பரசன் சிபிஎம் வட்டார செயலாளர் சிவராமன் மாவட்ட நிர்வாகி சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.