திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, அனைத்து கட்சி நிர்வாகிகள், செய்யாறு பொது மக்கள் மற்றும் வியாபாரிகள், செய்யாறு பெரியார் சிலையிலிருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணி நடத்தினர், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் டி.வெங்கடேசன், சோலை பழனி, வெ.சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.