திருவண்ணாமலை,மே 27-திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையார் கோயிலுக்கும், மலை சுற்றுவதற்கும் தினசரி ஏராளமான மக்கள் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்கள், அரசு அலுவலகங்களுக்கு செல்வதற்கும் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர். தற்போது கோடை காலம் நிலவுவதால், அதிக அளவில் சுற்றுலா பயணிகளும் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் திருவண்ணா மலை பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகி றது. பொதுமக்கள் வசதிக்காக பேருந்து நிலையத்தில், விழுப்புரம், திருச்சி பேருந்துகள் நிறுத்துமிடத்திலும், சேலம், கோவை பேருந்துகள் நிறுத்துமிடத்திலும் இரண்டு சின் டெக்ஸ் தொட்டிகள் அமைக் கப்பட்டு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.தற்போது அந்த சின் டெக்ஸ் தொட்டி தண்ணீர் இன்றி காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் பயணிகள் தண்ணீர் கிடைக்காமல் பேருந்து நிலையத்தில் தவித்து வருகின்றனர். அம்மா குடிநீர் பாட்டிலும் குறைந்த அளவே வருவதால் வேகமாக விற்று தீர்ந்து விடுகிறது. இதனை பயன்படுத்தி கடைக் காரர்கள் பாட்டில் குடிநீரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். எனவே, திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் போக்குவரத்து கழகம் சார்பில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.