திருவண்ணாமலை, பிப். 5- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சாத்தனூர் அணை நீர்த் தேக்கத்தில் இருந்து பாசனத் திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, விழுப் புரம் ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சாத்தனூர் அணை நீர் தேக்கத்தில் இருந்து சுமார் 7 ஆயிரத்து 643 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் இடது மற்றும் வலது புற கால் வாயில் முறையே 302.40 மி. கன அடி மற்றும் 453 புள்ளி 60 மி. கன அடி ஆக மொத் தம் 756 மி. கன அடிக்கு மார்ச் 10 ஆம் தேதி வரை சுமார் தண்ணீர் திறந்து விடப் படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதனன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேவூர் ராமச்சந் திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் அணையை திறந்து மலர் தூவி வரவேற்றனர். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்படாமல் இருப்ப தால் 12643 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவது கடினம் என விவசாயிகள் கூறுகின்றனர். தண்ணீர் திறப்பதற்கு முன்பே கால்வாய்களை சீரமைக்கக் கோரி பலமுறை தமிழக அரசிற்கும், பொதுப் பணித் துறைக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்காமல் தற்போது தண்ணீர் திறந்திருப்பதால் கால்வாய்களில் தண்ணீர் தேங்கி வீணாகி விடும் என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இனிவரும் காலங்களில் முறையாக சாத்தனூர் அணையை தூர் வாரி, கால்வாய்களை சரி செய்து தண்ணீர் திறக்க வேண்டும் என மூன்று மாவட்ட விவ சாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.