திருவண்ணாமலை, ஜுன் 21- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்திற் குட்பட்ட மலைக் கிராமங்களான கீழ்வலசை, மேல்வலசை, அக்கரப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கூட்டாக பண்ணை விவசாயம், உள்ளிட்ட அனைத்து பணி களையும் செய்து வருகிறார்கள். கீழ்வலசை கிராமத்தில் 400 பேர், மேல்வலசை கிரா மத்தில் 200 பேர், அக்கரப்பட்டி கிராமத்தில் 200 பேர் என 800க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இவர்களின் பிரதான தொழில் விவசாயமாகும். இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் கடுக்காய், சாமை, திணை, மர வள்ளிக்கிழங்கு, கேழ்வரகு, நெல் பயிர், பலாப்பழம், நெல்லிக் காய், மக்காச்சோளம் ஆகியவற்றை கூட்டு பண்ணை முறை யில் விவசாயம் செய்து தங்கள் குடும்பங்களை காப்பாற்றி வரு கிறார்கள்.
ஆடு, மாடு, கோழி, கழுதை ஆகிய கால்நடை களையும் மக்கள் வளர்த்து வருகிறார்கள். இந்த கிராம மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட் களை மலையின் கீழ் இருக்கும் முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் சென்று நேரடியாக விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் இவர்கள் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, வேலை என பல்வேறு பணிகளுக்காக அருகில் உள்ள நகரங் களுக்கு செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லை. அந்த மக்களின் நீண்டகால கோரிக்கையினை நிறை வேற்றும் வகையில் 13.4 கி.மீ. மலைப் பாதையில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம், வாணாபுரம் சேராப்பட்டு முதல், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ஆத்திப் பாடி ஊராட்சி, உள்செக்கடி கிராமம் வரை ரூ.7.22 கோடி மதிப்பீட்டில் 13.4 கி.மீ. அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணி களை மாவட்ட ஆட்சியர் கா.சு.கந்தசாமி ஆய்வு செய்தார்.