tamilnadu

img

மின்னல் தாக்கி வாலிபர் பலி

திருவண்ணாமலை, ஜூலை 1- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த செ.ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாயகன் (26). இவருக்கும் கீழ்பாச்சார் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. 15 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலை யில், இரவு, 11:30 மணிக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன், தனது வீட்டு மொட்டை மாடியில் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மழை பெய்தது. அதனால் மாடியில்  இருந்த தண்ணீர் தொட்டி ஓரம் ஒதுங்கி நின்று பேசி கொண்டிருந்தார். அந்த சமயத்தில், மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தானிப்பாடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;