tamilnadu

img

 வழங்கவேண்டிய பாக்கி பணம் வழங்கக் கோரி விவசாயிகள் சங்கம் ஆர்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விவசாயிகளுக்கு  வழங்கவேண்டிய பாக்கி பணம் ரூ .1 கோயை வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வந்தவாசி வட்டச் செயலாளர் ந.ராதாகிருண்ணன் தலைமையில்  வியாழனன்று (பிப். 13) ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்  வி.சுப்பிரமணி நிர்வாகிகள் ஜ.வே.சிவராமன், பெ.அரிதாசு, கி.பால்ராஜ், பெரணமல்லூர் சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். இதையடுத்து விற்பனை கூட கண்காணிப்பாளர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக 15  லட்சம் ரூபாயை பட்டுவாடா செய்யப்பட்ட்து. மீதி பணத்தை ஒரு வாரத்தில் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.