திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு பேட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள், துரிஞ்சாபுரம் பன்னீர்செல்வம், கலசபாக்கம் வி.சுப்பிரமணி, போளூர் விக்கிரமன், செங்கம் எ.பரிமளா ஆகியோர் திமுக மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மூத்த தலைவர் எம்.வீரபத்திரன், செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.