tamilnadu

img

கோயில் விழாவில்  இரு தரப்பினரிடையே மோதல்

 

திருவண்ணாமலை, ஜன. 19- கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கோயில் சிலை, பைக்குகள் சூறையாடப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கருங்காலி குப்பம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றது. அந்த கோயில் மற்றும் கோயில் கட்டிடம் தங்களுக்கு சொந்தம் என தலித் மக்களும் வேறு சாதியினரும் கூறிவந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், கோவிலுக்கு அருகிலிருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகள், வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார், பைக்குகளை அடித்து நொறுக்கினர். மேலும், கூத்தாண்டவர் சாமி சிலையும் அடித்து நொறுக்கப்பட்டது. தலித் மக்கள் மீது சாதிய வன்மத்தோடு சிலர் நடந்து கொள்வதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கருங்காலி குப்பம் கிராம தலித் மக்கள் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

;