திருவண்ணாமலை, ஆக. 3- திருவண்ணாமலை அருகே கிராமங்க ளுக்கு செல்லும் சாலைகள், மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக இருப்பதால், அந்த வழியாக செல்லும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். திருவண்ணாமலை - காஞ்சி சாலையி லிருந்து, பாலியப்பட்டு வழியாக, செங்கம் சாலை தானாமேடு வரை செல்லும் இணைப்பு சாலை உள்ளது. புனல்காடு, மாரியம்மன் நகர், செல்வபுரம், அண்ணாநகர், புதுகாலணி, பாலியப்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 2,500க்கும் மேற்பட்டோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் திருவண்ணாமலை நகரில் அதிகளவு போக்கு வரத்து நெரிசல் ஏற்படும். அப்போது செங்கம் சாலை தானாமேடு – காஞ்சி சாலை பகுதி களுக்கு இது இணைப்பு சாலையாக செயல் படுகிறது. ஏராளமான வெளியூர் வாகனங்க ளும் இந்த சாலை வழியாக செல்கின்றன. இந்நிலையில், தற்போது 5 கி.மீ. தூர முள்ள இந்த சாலையில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் மழைநீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். பலர் பள்ளத்தில் விழுந்து அடி படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.