tamilnadu

திருவண்ணாமலையில் 2 லட்சம் பேருக்கு போலியோ

திருவண்ணாமலை, ஜன. 19- திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 2 லட்சத்து 27 ஆயிரத்து 263 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாமை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 1928 முகாம்களில், 7579 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் திங்களன்று பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு வீட்டிலேயே சொட்டு மருந்து அளிக்க உள்ளனர்.

;