tamilnadu

img

தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்

திருவண்ணாமலை, ஜன. 19- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்  அடுத்த ஜப்திகாரியந்தல் கிராமத்தில், கோயில் திருவிழாவைக் காணச்சென்ற தலித்   இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கிய வர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கிராம மக்கள், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர். ஜப்திகாரியந்தல் கிராமத்தில் கோவில்  திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா வைக் காண காலனி பகுதியைச் சேர்ந்த  இளைஞர்கள் சென்றனர். சமீபத்தில் நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தோல்வி யடைந்த ஆதிக்க சாதியினர்  ஊருக்குள் வந்த தலித் இளைஞர்களைத் தாக்கி யுள்ளனர்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  அதிகம் வசிக்கும் காலனி பகுதியில் புகுந்து  வீடுகளைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படு கிறது.   தகவல் அறிந்து வந்த காவல்துறை யினர் இரு பிரிவினரையும்  சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். இந்த தகராறில்,  விடு தலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் காலனி  பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் தனியார் மற்றும் அரசு மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்த தாக்குதல் குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஜப்தி  காரியந்தல் கிராம தலித் மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

;