திருவண்ணாமலை, மே 31- திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வட்டம், படவேடு பகுதியில் அமைந்துள்ள 154 ஆண்டு பழமையான தற்போதும் பயன்பாட்டில் உள்ள அலியாபாத் அணைக்கட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் க. சு. கந்த சாமி பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். போளுர் வட்டம், படவேடு பகுதி யில் கமண்டல ஆற்றின் குறுக்கே 1866 ஆம் ஆண்டு கட்டப்பட்டது அலியா பாத் அணைக்கட்டு. 154 ஆண்டுகள் பழமையானது இந்த அணை. இந்த அணைக்கட்டு மூலம் ஏரி களுக்கு செல்லும் பிரதான கால்வாய் அமைந்துள்ளது. இதனுடன் கமண்டல நிதியில் செல்லும் கிளை கால்வாயும் அமைந்துள்ளது. அலியாபாத் அணைக்கட்டின் பிரதான கால்வாய் மற்றும் கிளை கால்வாய் தற்போதும் நல்ல நிலையில் தொடர் பயன்பாட்டில் உள்ளது. அலியாபாத் அணைக்கட்டின் பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் களம்பூர் ஏரி உட்பட 16 ஏரிகளுக்கு சென்றடைகிறது.
மேலும், கிளை கால்வாய் வழியாக கமண்டல நிதியில் தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் போளுர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு மற்றும் ஆற்காடு வட்டங்களில் உள்ள 48 ஏரிகளின் ஆயக்கட்டுகள் 7497 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான அலியாபத் அணைக்கட்டினை சீரமைப் பதற்கும், கல்வாய் மற்றும் ஏரிகளை புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் (தற்போது தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம்) உலக வங்கி நிதியுதவியுடன் பணிகள் மேற்கொள்ள அலியாபாத் அணைக்கட்டு பகுதியில் ரூ.2.00 கோடி, பிரதான கால்வாய்க்கு உட்பட்ட 16 ஏரிகளுக்கு ரூ.8.00 கோடி, ஆக மொத்தம் ரூ.10 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. தற்போது திருத்தப்பட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி திருத்தப்பட்ட மதிப்பீடு தமிழ்நாடு அரசின் பொதுப் பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் உலக வங்கிக்கு அனுப்பபடவுள்ளது. உலக வங்கியின் ஒப்புதல் கிடைத்த வுடன், தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து, ஒப்பந்தப்புள்ளி கோரப் பட்டு பணிகள் உடனடியாக தொடங் கப்படும். இத்திட்டத்தின் கீழ், அலியாபாத் அணைக்கட்டின் பிரதான கால் வாய்க்கு உட்பட்ட தற்காப்பு சுவர் இரண்டு பக்கம் கட்டுதல், கீழே கான்கிரீட் தளம் அமைத்தல், கால்வாயின் 10 கி.மீ. தூர்வாருதல், 16 ஏரிகளின் கோடி, மதகு கள், கரை உட்பட புனரமைத்தல், ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கிளை கால்வாயக்குட் பட்ட தற்காப்பு சுவர் கட்டுதல் சேதமடைந் ததை பழுது பார்த்து சிமெண்ட் தளம் அமைத்தல் மற்றும் கீழ் கல் அடுக்குதல் ஆகிய பணிகள் உட்பட அணைக்கட்டு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.