tamilnadu

img

அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஜூன் 16- கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பேருந்துகளை  இயக் குவதில் உள்ள சிரமங்களை, கண்டு கொள்ளாத போக்குவரத்து நிர்வா கத்தை கண்டித்து அனைத்து தொழிற் சங்க கூட்டுக்குழு சார்பில் உடுமலை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் 50 சதவிகித பேருந்துகள் 50 சதவிகித பயணிகளுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில், இப்பேருந்துகளில் தனி மனித இடைவெளியை யாரும் பின் பற்றுவதில்லை.  

இச்சூழலில், போக்கு வரத்து கழக நிர்வாகமானது ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப தொழிலா ளர்கள் மற்றும் அலுவலக பணியாளர் களுக்கு முகக்கவசம் மற்றும் கையுறை களை ஒருமுறை மட்டுமே வழங்கியுள் ளது. ஆகவே, மாற்று முகக்கவசம், கையுறைகளை வழங்க வேண்டும். பேருந்து நிலையங்கள் மற்றும் பணிம னைகளில் உள்ள கழிவறை, ஓய்வறை களை, சுகாதாரமான முறையில் பராம ரிக்க வேண்டும்.  மேலும், பணியில் ஈடுபடும்போது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட் டால், அதற்கான சிகிச்சை, சிகிச்சை காலத்திற்கான சிறப்பு விடுப்பு, தொழி லாளர் மரணமடைந்தால் அரசு அறி வித்துள்ள சிறப்பு காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

விடுப்பு இல்லாத ஊழியர்களுக்கு ஊதி யம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.  இதற்கு தீர்வு காணும் வகையில் முழு மையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் உடுமலை போக்குவரத்து கழகப் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, எல்பி எப் மண்டல இணை  பொதுச்செயலா ளர் மணி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், சிஐ டியு விஸ்வநாதன், ஏஐடியூசி நாகராஜ் உள்ளிட்ட கூட்டுக்குழு நிர்வாகிகள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கிளை மேலாளரிடம் மனு அளித்தனர்.