திருப்பூர், மே 24 - கொரோனா ஊரடங்கு தளர்த் தப்பட்டு பின்னலாடைத் தொழில் கள் இயங்கத் தொடங்கினாலும் அடுத்து என்ன செய்வது என்று தெரி யாத குழப்பமான நிலையில் திருப் பூர் உள்ளது. மார்ச் 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் திடீரென ஊரடங்கு அறிவிக் கப்பட்ட நிலையில், திருப்பூர் பின் னலாடை நிறுவனங்கள் முற்றாக முடங்கின. ஒரு கட்டத்தில் தொழிற் சாலைகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத் தது. இரண்டாவது கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில், மூன்றாவது கட்ட ஊரடங்கு மே 17ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இதற்கிடையே தொழில்துறையினர் வலியுறுத்திய நிலையில் மே 6 ஆம் தேதி முதல் பின்னலாடைத் தொழிற்சாலைகள் சில நிபந்தனைகளுடன் இயங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டது.
இந்த அனுமதி வழங்கப்பட்டாலும் ஓரளவு தொழிற்சாலைகள் மட்டும் திறக்கப் பட்டு வேலையைத் தொடங்கினர். கணிசமான தொழிற்சாலைகள் இயக் கப்படவில்லை. இந்த தொழிற்சா லைகளிலும் 30 சதவிகிதம் முதல் அதிகபட்சம் 50 சதவிகிதம் தொழி லாளர்கள்தான் வேலை செய்கின்ற னர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு நிபந் தனைகளுடன் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கி 20 நாட்கள் ஆன நிலையில், இப்போதைய நிலவரம் என்ன என்பது பற்றி தொழில் துறை யினரிடம் கேட்டபோது அவர்கள் குழப்பமான நிலையைச் சந்தித்து வருவதாகக் கூறுகின்றனர்.
சிவக்குமார்
வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் சிவக்குமார் கூறுகையில், ஊரடங்குக்கு முன்பு உற்பத்தி நிலையில் நிறுத்தப்பட் டிருந்த ஆடைகளை முழுமைப்ப டுத்தும் வேலைதான் தற்போது நடை பெற்று வருகிறது. ஏற்கெனவே தயா ரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பிய சரக்குகளுக்கு இப்போதைக்கு பணம் அனுப்ப முடியாது, தாமதமாகும் எனத் தெரிவித்து விட்டனர். இது தவிர வேறொரு ஆர்டர் அனுப்பியது துறைமுகத்தில் முடங்கிக் கிடக்கி றது. புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட ஆர்டரை ஜூன் மாதத்திற்குள் அனுப்ப முடியாது என்ற நிலையில் அந்த ஆர்டர் ரத்தாகிவிட்டது. இப்போதைய சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது நிலையற்ற தன்மையாக உள்ளது. சர் வதேச பிரச்சனையாக கொரோனா இருப்பதால் அங்கு நிலைமை சீர டையாமல் இங்கு இயல்பு நிலை வருவது சிரமம் என்றார்.
ஆர்.நந்தகோபால்
திருநீலகண்டபுரம் பகுதியைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஆர்.நந்த கோபால் கூறியதாவது, பின்ன லாடை தொழிற்சாலைகளில் இப் போது சுமார் 50 சதவிகிதம் தொழி லாளர்கள் வேலை செய்கிறார்கள். ஏற்கெனவே நிலுவையில் இருந்த வேலைகளைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கின்றனர். அதே சமயம் புதிய ஆர்டர்கள் ஓரளவு வரு கின்றன. ஆனால் விலை மிகவும் குறைத்துக் கேட்கின்றனர். மேலும் இப்போது வர வேண்டிய ஆர்டர் களை டிசம்பர் மாதத்துக்கு ஒத்தி வைத்துவிட்டனர். செய்து கொடுத்த ஆர்டர்களுக்குரிய தொகையையும் மேலும் மூன்று மாதம் கழித்துத்தான் தருவார்கள். இப்போது ஆலைகள் இயக்கப்பட்டாலும் கொரோனா பர வல் அதிகரிப்பதால் மீண்டும் திடீ ரென நிறுத்தம் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் உள்ளது. எனவே தெளிவற்ற நிலைதான் உள்ளது. இன்னும் ஒரு மாத காலம் கடந்தால்தான் திருப்பூரின் நிலை தெரியவரும், என்றார்.
எம்.பி.முத்துரத்தினம்
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறு கையில், ஏற்கெனவே அரைகுறை நிலையில் இருந்த ஆடைகளை முழுமைப்படுத்தும் வேலைதான் ஆலைகளில் நடந்து வருகிறது. முத லில் வீடுகளில் முடங்கி இருந்தோம். இப்போது ஆலைக்கு வருகிறோம். எனினும் புதிய ஆர்டர்கள் பெரிய ளவுக்கு வரவில்லை. உள்நாட்டு போக்குவரத்தும் இல்லாததால் வியா பாரமும் இல்லை. அடுத்து என்ன செய்வது என்ற குழப்பமான நிலை தான் நீடிக்கிறது. இப்போது ஆலைகளை இயக் குவதற்கே நிதிப் பற்றாக்குறை உள் ளது. வங்கிகள் கடன் தருவதாகச் சொன்னாலும் இன்று வரை வங்கி கள் அரசு ஆணை கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். பெரிய நிறு வனங்கள்தான் ஏற்கெனவே பிணை வைத்து கடன் பெற்றிருந்தால் அவர் களுக்கு மீண்டும் கடன் தருகின்ற னர். இப்போதைய நிலையில் வெளி நாட்டு ஆர்டர் - வங்கி ஆதரவு - தொழி லாளர் என மூன்றும் இருந்தால்தான் தொழிலை நடத்த முடியும். ஆனால் இப்போது வங்கிகள் ஆதரவு இல்லை. அரசு அறிவிக்கும் சிறப்புத் திட்டமும் செய்தியாக வருகிறது. நடைமுறையில் எங்களுக்கு இது வரை கிடைக்கவில்லை. இந்நிலை நீடித்தால் 80 சதவிகிதம் சிறு, குறு தொழிற்சாலைகள் தாக்குப்பிடிக்க முடியாது. வங்கிகள் கடன் தருவ துடன், பின்னலாடைகளுக்கான மூலப்பொருட்கள் விலை குறைந்த பட்சம் 2 வருடத்துக்காவது ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாக இருக்க வேண்டும். சர்வதேச சந் தையில் விலையை குறைத்துக் கேட் பதால் இங்கு விலைவாசி கட்டுக்குள் இருந்தால்தான் நாம் போட்டிபோட முடியும். இப்போதைய நிலை தெளிவில்லாமல்தான் இருக்கிறது என்று கூறினார். எனவே, திருப்பூர் பின்ன லாடைத் தொழில் இப்போதைய சூழலில்நிச்சயமற்ற நிலையில் குழப்பத்துடன்தான் இயக்கப்பட் டுக் கொண்டிருக்கிறது. சார்புத் தொழில்களான நிட்டிங், டையிங் உள்ளிட்ட பல தொழில்களும் இங் கொன்றும், அங்கொன்றுமாக இயக் கப்படுகின்றன. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல்தான் திருப்பூரில் மிகப்பெரும்பாலான சிறு, குறு பின்னலாடை உற்பத்தியா ளர்கள் தடுமாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். போக்குவ ரத்து தொடங்கப்பட்டு சந்தை சீரடை யும்போதுதான் பின்னலாடை உற் பத்தி பாதிப்பில்லாமல் தொடர முடி யும். அதற்கு உரியநடவடிக்கை களை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தொழில் துறையினர் எதிர் பார்க்கின்றனர். -
வே. தூயவன்