tamilnadu

img

திருப்பூர் விவேகானந்தா சேவாலயத்தை மூட உத்தரவு!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா சேவாலயத்தை மூடப்படுவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் திருமுருகன் பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலயம் என்ற காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 15 குழந்தைகள் உள்ளனர். இந்த காப்பகத்தில் கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டு 3 குழந்தைகள் உயிரிழந்ததுள்ளனர். மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட 11 குழந்தைகள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று காப்பகத்தை ஆய்வு செய்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், காப்பகம் மூடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், காப்பகத்திலிருந்த மற்ற குழந்தைகள் ஈரோட்டில் உள்ள அரசு இல்லங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், சிறுவர்களை காப்பகத்தில் சரியாக கண்காணிக்கவில்லை என்றும், நிர்வாக செயல்பாடுகளில் அலட்சியமாக இருந்த காப்பக நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.