திருப்பூர், நவ. 13 - பொங்கலூர் ஒன்றியம் கண்டியன் கோவில் கிராமத்தில் கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவர்கள் கிராமப்புற தங்கல் திட்டத்தில் கிராமப்புற மதிப்பீடு செய்தனர். கோவை வேளாண் கல்லூரியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ், பொங்கலூர் வட்டா ரத்தில் தங்கி, பயிற்சி மேற்கொண்டு வரு கின்றனா். இதன் ஒரு பகுதியாக, அலகு மலை ஊராட்சி இராமம்பாளையத்தில் உள்ள வளங்களை அறிய சமூக வரைபடம், பொதுமக்களின் இடம் பெயா்தலை கண்ட றிய இயக்க வரைபடம், கிராமத்தில் உள்ள பிரச்சனைகளை அறிய பிரச்சனை மர வரைபடத்தையும் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகள் அறிய விளை நிலங்களை பார்வையிட்டு, பொது தேவைக்கான இடங்களின் வரைபடம் ஆகியவற்றை பொதுமக்களின் உதவியோடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வரைந்தனர். மேலும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு உயர்த்த லாம் என்பதை, வரைபடம் மூலம் விளக்கி, தீர்வு கூறினர். இதில் விவசாயிகள், பொது மக்கள் பங்கேற்றனர். அத்துடன் கிராமத் தங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக புதனன்று பொங்கலூர் கிரா மத்தின் முன்னோடி பெண் விவசாயியான ராதாமணி என்பவரின் தோட்டத்தில் வேளாண் மாணவர்கள் ஒட்டு ரக கத்தரி வளர்ப்பு குறித்து செயல் விளக்கம் செய்துக் காட்டினா். 60 நாட்கள் வயதுடைய சுண் டைக்காய் செடியை வோ் பாகமாகவும், (அடிப்பாகம்) 30 நாள் வயதுடைய கத்திரி செடியினை தண்டாகவும் (நுனிப் பாகம்) பயன்படுத்தி பிளவு ஒட்டுமுறையில் இணைத்து 30 நாட்கள் கழித்து பயிரிடுவ தன் மூலம் ஒட்டு ரக கத்திரி செடியை வளர்க் லாம் என்றனா். ஒட்டு ரக கத்திரியானது இரண்டிலிருந்து மூன்று வருடம் நீடித்து வளரும், சாதாரண கத்திரியைக் காட்டிலும் அதிக மகசூலை ஈட்டுவதுடன் நூற்புழு மற் றும் வறட்சியைத் தாங்கி வளரும் என்றும் கூறினா். மேலும் பொங்கலூர் வேளாண் அறிவி யல் நிலையம் அருகே உள்ள கஸ்தூரி நாயுடு தோட்டத்தில் வாழையில் முன்நேர்த்தி செய்தல் பற்றி வேளாண் மாணவர்கள் விரி வான செயல் விளக்கம் அளித்தனர். வாழை சாகுப்படியில் மகசூலை பாதிக் கும் பிரச்சனைகளான வாழை வாடல் நோய், முடிக்கொத்து நோய், நூற்புழு மற் றும் தண்டு துளைப்பான் தாக்குதலில் இருந்து மரத்தின் வளர்ச்சியை அதிகரிப் பதோடு மகசூலை மேம்படுத்தலாம் என்று மாணவர்கள் எடுத்துரைத்தனர். வாழை கன்றுகளை முன்நேர்த்தி செய் தல் முறையாவது, கிழங்குகளின் அழுகிய பகுதிகளை, வேர்களை வெட்டி சரி செய்து தண்டுப்பகுதியின் 20 செ.மீ அளவு இருக்கு மாறு கிழங்கை வெட்டி, பக்கக்கன்றுகளை அளவுக்கேற்றவாறு தரம் பிரிக்க வேண் டும். ரஸ்தாளி, மொந்தன், விருப்பாட்சி ரகங் களில் வாடல் நோயைத் தவிர்க்க, தாக்கிய வேர்கிழங்கை வெட்டி, 0.1% எமிசான் கரை சலில் (1 லிட்டர் நீரில் 1 கிராம்) 5 நிமிடங்க ளுக்கு நனைத்து எடுக்க வேண்டும். ஒரு பக்கக் கன்றுக்கு 40 கிராம் கார்போப்யூரான் 3ஜி குருணைகளை எடுத்து நேர்த்தி செய்ய வேண்டும். 4 பங்கு களிமண், 5 பங்கு நீர், கார்போப்யூரான் கலந்த கலவையில் கிழங்கை நனைப்பதால் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். மாற்றாக, கிழங்கை 0.75% மோனோகுரோட்டோபாஸ் கரை சலில் நனைத்து, 24 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். 5-6 இலைகளை உடைய திசு வளர்ப்பு வாழையைப் பயன் படுத்த வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு விளக்கம் கொடுத்தனர்.