tamilnadu

வேனின் டயர் வெடித்து விபத்து - 20 பேர் படுகாயம்

அவிநாசி, அக். 24- அவிநாசி அருகே அதிவேகமாகச் சென்ற பனியன் நிறுவன வேனின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 15 பெண்கள் உள்பட 20 க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் படுகாயமடைந்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே எரங்காட்டூர் பகுதியில் இருந்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு 15 பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேனில் அன்றாடம் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சனியன்று வழக்கம்போல் தொழிலாளர்களை அழைத்து வந்த வேன் அவிநாசி - சேவூர் சாலை கருமாபாளையம் பேருந்து நிறுத் தம் அருகே வரும் போது, பின்புற டயர் வெடித்ததில் வேன் கட்டுப்பாட்டை இழந்து  விபத்துக்குள்ளானது. இதில் 15 பெண்கள் உள்பட 20 க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர். இதையடுத்து சம்பவயிடத் திற்கு வந்த சேவூர் போலீசார், படுகாய மடைந்து தொழிலாளர்களை அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத் தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.