tamilnadu

img

கொரோனா பாதிப்பு சூழலில் தினசரி மார்க்கெட்டை இடிக்க முயல்வதா? வியாபாரிகள், அரசியல் கட்சியினர் அரை நிர்வாணப் போராட்டம்

திருப்பூர், மார்ச் 21 - கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் மக்கள் பொது இடங்க ளில் அதிகமாகக் கூடக் கூடாது என பிரச்சாரம் செய்துவிட்டு, அந்த சூழலில் திருப்பூர் தினசரி சந் தையை இடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. வியாபாரிகள், அனைத்து அரசியல் கட்சியினர் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர். திருப்பூரில் மிடுக்கான நகரம் திட்டத்தின் கீழ் தினசரி சந்தையை அகற்றிவிட்டு நவீன வணிக வளா கம் கட்டுவதென மாநகராட்சி நிர் வாகம் தீர்மானித்துள்ளது. இதற் காக தினசரி சந்தையில் உள்ள கடைகளைக் காலி செய்யச் சொல்லி, சந்தையை இடிக்கும் பணியை மேற்கொள்ள மாநக ராட்சி நிர்வாகத்தினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். எனினும் தினசரி சந்தையில் பெண்கள் உள்பட சுமார் 500 வியாபாரிகள் கடைகளை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இங்குள்ள அனைத்து வியாபாரிக ளுக்கும் மாற்று இடம் கொடுத்து விட்டு தினசரி சந்தையை இடிக் கும் பணியைத் தொடங்க வேண் டும், புதிதாக கட்டும் வணிக வளா கத்தில் அனைவருக்கும் மீண்டும்  கடைகள் ஒதுக்கீடு செய்வதை எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று வியாபா ரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 60 கடைகளை ஏற்படுத்தி அங்கு  தினசரி சந்தை வியாபாரிகள் இடம் மாற்றிக் கொள்ளும்படி மாநக ராட்சி நிர்வாகம் கூறி வருகிறது. சுமார் 500 வியாபாரிகள் இருக் கும் நிலையில் 60 கடைகள் மட் டும் போதுமானதல்ல, எனவே அனைவருக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். ஏற்கெனவே இங்குள்ள வியா பாரிகளுக்கு காலி செய்ய நோட் டீஸ் வழங்கிவிட்டதைக் கூறி தினசரி சந்தையை இடிக்கும் பணியைத் தொடங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகத்தினர் ஆயத்தமானார்கள். ஒவ்வொரு முறை அதிகாரிகள், கட்டுமானங் களை இடிக்கத் தேவையான வாக னங்கள், உபகரணங்கள், பணியா ளர்களுடன் அங்கு வரும்போதும் வியாபாரிகள் அனைத்துக் கட்சி யினர் ஒத்துழைப்புடன் போராட் டம் நடத்தி தடுத்து வருகின்றனர். அதேபோல் சனிக்கிழமை காலை தினசரி சந்தையை இடிப்ப தென காவல் துறையினருடன், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு  வந்தனர். அப்போது வியாபாரிக ளுடன் அனைத்துக் கட்சி நிர்வா கிகளும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதத்தில் மேற் சட்டைகளைக் கழற்றிவிட்டு அரை நிர்வாணமாக அமர்ந்து வியாபாரிகளும், அரசியல் கட்சி யினரும் போராட்டம் நடத்தினர். சனியன்று காலை தொடங்கிய போராட்டம் மதியம் 12 மணி வரை நீடித்தது. அப்போது அதிகாரிகள் அர சியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு, மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்திய நிலையிலும் எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்கும்படி வியாபாரிகள் தரப்பில் வற்புறுத்தப்பட்டது.  மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, சமூக கட்டுப்பாடு என்று சொல்லி அனைத்து வியாபார நிறுவனங்க ளையும் மூட வேண்டும், பொது மக்கள் அதிகமாகக் கூடக் கூடாது என்று அறிவித்து விட்டு அதையே வாய்ப்பாகப் பயன்படுத்தி சந் தையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் களத்தில் இறங்குவது சரியல்ல என்றும் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கரோனா பாதிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வரு வதால் கடைகளை அகற்றுவது தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டப்பட்டு அடுத்த நடவடிக்கை தொடர்வது என்று முடிவு எடுக் கப்பட்டதாக எழுத்துப்பூர்வமாக மாநகராட்சி தரப்பில் ஒப்புக் கொண்டனர்.

இதில் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பரா யன், திமுக மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், காங்கிரஸ் மாவட் டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், மதிமுக மாநகரச் செயலாளர் சு.சிவபாலன் மற்றும் வியாபாரி கள் சங்கத்தினரும் கையெழுத்திட் டனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.ராஜகோபால், மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், மாநக ரக்குழு உறுப்பினர்  பி.பாலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ரவி உள்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் வியாபாரிகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட னர்.தற்போது கடைகள் அகற் றப்படாது என உறுதியளிக்கப் பட்ட நிலையில் போராட்டம் முடித் துக் கொள்ளப்பட்டது.