tamilnadu

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூர், ஜூலை 30- சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளை யாட்டுப் போட்டிகளுக்கு விதிமுறைகளுடன் பயிற் சியை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச மற் றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிக ளுக்கு பயிற்சியை துவங்குவதற்கு விதிமுறைக ளுடன், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, 15 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைக ளுக்கு பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். பயிற்சிக்கு வரும் நபர்கள் அனைவருக்கும் வெப்ப மானி சோதனை செய்யப்படும். இதற்கென தனிக் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் படும்.   தடகளம், ஹாக்கி, கைப்பந்து, கையுந்து பந்து,  கூடைப்பந்து, இறகுப்பந்து, மேசைபந்து ஆகிய விளையாட்டுகளுக்கு 2 மீட்டர் சமூக இடைவெளியு டன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

டேக்வோண்டா, ஜுடோ, கபாடி, கராத்தே, குத்துச் சண்டை, ஊசூ, மல்யுத்தம் ஆகிய விளையாட்டுக் களுக்கு உடற்பயிற்சிக்கு மட்டும் அனுமதி வழங்கப் படுகிறது. மேலும், விபரங்களுக்கு திருப்பூர் மாவட்ட விளையாட்டுப்பிரிவு அலுவலகத்தை 2244899 / 9788647557/ 8883873814  என்ற தொலைபேசி எண் ணில் தொடர்பு கொண்டு அறியலாம் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.