tamilnadu

img

திருப்பூரில் தேர்தல் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி

திருப்பூர், மே 17 -திருப்பூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் வெள்ளியன்று வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.திருப்பூர் எல்ஆர்ஜி அரசினர் மகளிர் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உரிய வாக்குகள் மே 23ஆம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கும், அஞ்சல் ஓட்டுகள் மற்றும் படைப்பணியாளர்களின் அஞ்சல் ஓட்டுகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கும், நுண்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட உள்ள அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி பணிகளை மேற்கொள்வது குறித்து ஆட்சியர் பழனிச்சாமி விளக்கினார். இக்கூட்டத்தில் மாவட்டவருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கீதா பிரியா, பாஷியம், தேர்தல் வட்டாட்சியர்சா.முருகதாஸ் உள்பட தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்.