திருப்பூர், பிப். 23 – மத்திய அரசின் அடுத்தடுத்த தாக்குதல்களால் நெருக்கடி மேல் நெருக்கடிக்குள் தள்ளப்படும் திருப்பூர் பின்னலாடைத் தொழில், எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தள்ளாடிக் கொண் டிருக்கிறது. கடந்த 2018 – 2019ஆம் நிதி யாண்டில் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி ரூ.26 ஆயிரம் கோடியைத் தொட்டது. ஆனால் நடப்பு நிதி யாண்டு 2019 – 2020 முடிவடைவ தற்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் கடந்த ஆண்டை விட ஏற்றுமதி அளவு கடும் சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக நடப்பு நிதி யாண்டில் ஜனவரி மாதத்துடன் 10 மாத காலம் முடிவடைந்திருக்கும் நிலை யில் ஏற்றுமதி அளவு ரூ.21 ஆயிரத்து 40 கோடியாக பதிவாகி இருக்கிறது. இரண்டு மாத கால ஏற்றுமதி அளவை உத்தேசமாக மதிப்பிட்டாலும் கடந்த ஆண்டில் ரூ.26ஆயிரம் கோடியை எட்ட முடியாது என்பது உறுதி. பத்து சதவிகித அளவுக்கு ஏற்றுமதி சரிவைச் சந்தித்தால் சுமார் ரூ.2ஆயிரத்து 600 கோடி குறையும். இது மிகப்பெரும் வீழ்ச்சியாகும். இது ஒருபுறம் இருக்க உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியும் ஆரோக்கி யமான நிலையில் இல்லை. கடுமை யான நெருக்கடியைச் சந்தித்து வரு கிறது என்று தொழில் துறையினர் கூறுகின்றனர். திருப்பூர் பின்னலாடைத் தொழிலை நம்பி ஏறத்தாழ 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வரும் நிலையில், அடுத்தடுத்த தொடர் தாக்குதலால் உற்பத்தி அளவு வீழ்ச்சி அடைந்து, வருவாய் இழப்புடன், வேலை வாய்ப்பும் குறைந்து வருகி றது. குறிப்பாக நடுத்தர, சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் மிகக் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின் றன.
திருப்பூர் பின்னலாடைத் தொழில் நிலவரம் குறித்து அரசுத் தரப்பில் இருந்தோ, அதிகாரப்பூர்வ தொழில் அமைப்புகளோ வெளிப்படையாக, உண்மையான விபரங்களை தெரி விப்பதில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் உற்பத்தியாளர்களிடம் இது குறித்து விசாரிக்கும்போது நிலைமை மிகவும் ஆபத்தான கட் டத்தை நோக்கிப் போய்க் கொண்டி ருப்பதாகக் கூறுகின்றனர். இப் போதுள்ள திருப்பூரில் பின்னலாடை உற்பத்திக் கட்டமைப்பில், சுமார் 30 சதவிகிதம் அளவுக்குத்தான் வேலை நடக்கிறது என்று பின்னலாடைத் துறையினர் சொல்கின்றனர். நம்புவ தற்குக் கடினமாக இருந்தாலும் இது தான் உண்மை என்று இத்துறையைச் சேர்ந்த பலரும் கூறுகின்றனர். ஆனால் இவ்வளவு மோசமான நிலையில் இருந்து தற்காத்துக் கொள் வதற்கும், மீடேறுவதற்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை என தொழில் துறையினர் கூறுகின்றனர். கடலில் திசை தெரியாமல் தத்தளிக் கும் கப்பலின் நிலையில் திருப்பூர் இருப்பதாக அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். மத்திய அரசின் நிதி நிலை அறிக் கையில் இந்த தொழிலுக்கு ஏதேனும் சலுகைகள் அறிவிக்கப்படும் என நம்பி ஏமாற்றம் அடைந்ததாகவும் தெரி வித்தனர். ஆனால் திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கமோ தொழில் துறையின் உண்மை நிலையை வெளிப்படுத்துவ தற்கு பதிலாக, ஆட்சியாளர்களைப் பாராட்டுவதிலேயே நேரத்தைச் செலவிடுகின்றனர். ஏறத்தாழ 10 ஆண்டு காலமாகவே திருப்பூர் பின்னலாடைத் தொழில் ஏற்றத்தாழ்வான சூழ்நிலையைச் சந்தித்து வந்தாலும், 2016ஆம் ஆண்டு மோடியின் செல்லா பண அறிவிப்பும், அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையும் தான் பேரிடி யாக திருப்பூரை நிலைகுலைய வைத் தது. செல்லா பண நடவடிக்கை உள் நாட்டு பின்னலாடைத் தொழிலையும், தொழிலாளர்களையும் கடுமையாக பாதித்தது என்றால், ஜிஎஸ்டி அறி விப்பு ஜாப் ஒர்க் நிறுவனங்களையும், சிறு, குறு நடுத்தர நிறுவனங்களையும் மட்டுமின்றி ஏற்றுமதியாளர்களையும் பாதித்துள்ளது.
இப்போது வரை இப்பிரச்சனை தீரவில்லை. ஏற்றுமதியாளர்கள் 1,100 பேருக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. டிராபேக் மற்றும் சலுகைகளின் மூலம் வழங்க வேண்டிய ரூ.1,400 கோடியை நிறுத்தி வைத்துள்ளது. இதுவே நடைமுறை மூலதனத்தை முடக்கி வைத்தது போலச் செய்து, பின்னலாடைத் தொழில் சிக்கலில் தவித்து வருவதற்கு காரணமாக உள் ளது. பின்னலாடை உற்பத்தித் துறையி னர் படும் சிரமங்கள் ஒருபுறம் இருக்க, தொழிலாளர்கள் நிலையோ மிக மோச மாக உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், தமிழகத் தின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு குடும்பத்துடன் வந்து தங்கி வேலை பார்த்து வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அன்றாடத் தேவைக்கே கஷ்டப்படும் சூழ்நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளனர். வெளிமாநி லங்களில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு வந்த பலர் மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். தமிழகத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதற்குப் பெயர்பெற்ற திருப் பூர் நகரம் பொலிவிழந்து வருவது திருப்பூருக்கு மட்டும் கெட்ட செய்தி யல்ல, தமிழகத்தின் வேலைவாய்ப்பு சரிவிற்கான ஒரு முக்கிய அடையாள மாகவும் இது உள்ளது. வந்தாரை வாழ வைக்கும் திருப்பூரை மீட்பதற்கு மத் திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை உடனடியாக நிறுவனங்களுக்கு வழங்க வேண் டும், வங்கிகள் கடன் தரும் நடைமுறை கடுமையானதாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள தொழில் துறையில் நேர்மை யாக, சரியாக தொழில் செய்வோருக்கு வங்கிக் கடன் வசதி கிடைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும், ஏற்றுமதியை ஊக்குவிப்பது அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும், வேலைவாய்ப்பைப் பெருக்கவும் பயன்படும் என்ற பார்வையுடன் மத்திய அரசு தேவையான சலுகை களை இத்தொழிலுக்கு வழங்க வேண்டும், அதேசமயம் ஏற்றுமதிக்கு இணையாக உள்நாட்டு பின்னலா டைத் தொழிலை சீராக நடத்துவதற் குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குறிப்பாக மக்களின் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. உள்நாட்டு சந்தையை பலப்படுத்த, விவசாயம், கிராமப்புற பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். அதன் மூலமே திருப்பூர் பின்னலாடைகள் உள்நாட்டு விற் பனை அதிகரிக்கும். இங்கும் வேலை வாய்ப்பு பெருகும். அதேசமயம் திருப்பூர் தொழிலா ளர்கள் வாழ்வாதாரப் பிரச்சனைக ளுக்கும் உரிய கவனம் செலுத்த வேண் டும். ஸ்மார்ட் சிட்டி திட்டம் என மத்திய அரசின் திட்டம் நிறைவேற் றப்படுவதில் இங்குள்ள உழைக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விசயங்கள் ஏதும் இல்லை. மாறாக அதிகாரிகள் மேம் போக்கான திட்டமிடல் உள்ளூர் வியா பாரிகள், சிறு சாலையோர வர்த்தகர் களை வெளியேற்றுவதாக உள்ளது. தொழிலாளர் குடியிருப்பு, பொது சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத் துவது, வாழ்வாதாரக் கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என் பது தொழிற்சங்கங்களின் கோரிக் கையாகும். ஒருங்கிணைந்த நடவடிக்கை களை தொலைநோக்குப் பார்வையு டன் நிறைவேற்றுவதன் மூலமே திசை தெரியாமல் தத்தளிக்கும் திருப்பூரை மீட்க முடியும் என்று இந்நகரின் அனைத்துத் தரப்பினரின் குரலாக ஒலிக்கிறது. ஆனால் ஆட்சியாளர்க ளின் காதுகளுக்கு இது எட்டுவதுதான் கேள்விக்குறியாக உள்ளது! -(ந.நி)