tamilnadu

img

திருப்பூர்: முழு ஊரடங்கில் மது விற்பனை அமோகம்

திருப்பூர், ஜூலை  13 – கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு ஜூலை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்ப டுத்தப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அன்றைய தினம் மது பான விற்பனை அமோகமாக நடை பெற்றது.

முழு ஊரடங்கின்போது தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை மட்டுமின்றி அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில். ஜூலை 12 ஆம் தேதி ஞாயிறன்று முழு ஊரடங் கின்போது திருப்பூர் மாநகரம் முழுவ தும் கடைகள் அடைக்கப்பட்டு பொது மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காட்சியளித்தன. ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமையே டாஸ்மாக் மது பானக் கடைகளில் கூட்டம் அலைமோ தியது.

மதுப்பிரியர்கள் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்ற னர். இருந்தும்கூட ஞாயிற்றுக்கிழமை யும் திருப்பூர் மாநகரம் மற்றும் புற நகர்ப் பகுதிகளில் மூடப்பட்ட மது பானக் கடைகளின் கொள்ளைப் புறங் களில் ரகசியமாக மதுபான விற்பனை நடைபெற்றது. அதேபோல் மது பார் களிலும் விற்பனை நடைபெற்றது.

திருப்பூர் யூனியன் மில் ரோடு, சாமுண்டிபுரம், கே.வி.ஆர்.நகர், அணைப்பாளையம், பாண்டியன் நகர், திருமுருகன்பூண்டி, கோவில்வழி, செவந்தாம்பாளையம், இடுவம்பாளை யம், சிறுபூலுவபட்டி, ஆண்டிபா ளையம் மட்டுமின்றி மாநகரின் அனைத்து பகுதிகளிலும் அனுமதி யின்றி மது விற்பனை அதிகளவில் நடந்தது.

எனினும் காவல் துறையி னரோ, அரசு அதிகாரிகளோ இந்த மது பான விற்பனையைக் கண்காணித்து தடுத்து நிறுத்துவதற்கு எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இது தவிர சில பகுதிகளில் கூடுத லாக வாங்கி பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களையும் ஊருக்கு ஒதுக்குப்பு றமான புதர் பகுதிகளில் அதிக விலைக்கு சிலர் மதுபானங்களை விற் பனை செய்தனர்

.மாநகரில் அமைந்தி ருக்கும் தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இயங் கும் டாஸ்மாக் கடை ஒட்டிய பகுதிகளி லேயே மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதேபோல் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மது விற்பனை நடைபெற்றது. ஒருபுறம் முழு ஊரடங்கு என அறி வித்து விட்டு மறுபுறம் மாவட்ட டாஸ் மாக் நிர்வாகத்தின் ஆதரவுடனேயே இதுபோல் அரசின் ஆணையை மீறி, சட்டத்துக்குப் புறம்பாக மதுபானங் கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.