திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலூக்க கொழுமம் ஊராட்சியில் உள்ள ஊர் சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலூக்க கொழுமம் ஊராட்சியில் உள்ள ஊர் சாவடிக்கு முன்பு பேருந்திற்காக நின்று கொண்டிருந்த முரளி ராஜ (35), மணிகண்டன் (28), கெளதம் (29) ஆகியோர் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். படுகாயம் அடைந்த இவர்கள் 3 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வழியில் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தவிடப்பட்டுள்ளது.